உள்ளூர் செய்திகள்

சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-15 09:43 GMT   |   Update On 2022-10-15 09:43 GMT
  • தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • இதில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஓசூர்,

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலி தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர், தளி ஒன்றிய சங்கத்தின் சார்பில், ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் நஞ்சுண்ட ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனிவாசன் தொடக்க உரையாற்றினார்.

ஒன்றிய செயலாளர் வெங்கடகிரியப்பா, குணவதி சீனிவாசலு, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.துரை ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

முடிவில், ஒன்றிய பொருளாளர் ராஜண்ணா நன்றி கூறினார். இதில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

Similar News