உள்ளூர் செய்திகள்

துணை மேயர் கே.ஆர்.ராஜு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

தச்சநல்லூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

Published On 2023-11-16 09:17 GMT   |   Update On 2023-11-16 09:17 GMT
  • நெல்லையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் காய்ச்சல் பரவுதலை தடுக்க தச்சநல்லூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் காய்ச்சல் பரவுதலை தடுக்க மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர் அண்ணா சிலை முன்பு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் சங்கர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், ஜானகிராமன், வட்ட அவைத் தலைவர் முருகப்பெருமாள், வட்ட செயலாளர் பிரேம் கணேசன், தச்சை பகுதி துணை செயலாளர் சீனி, வட்டப்பிரதிநிதி நெல்லையப்பன், மாயாகிருஷ்ணன், மாரிசாமி, குத்தாலிங்கம் நிர்வாகிகள் மார்க்கெட் நயினார், காந்திமதி நாதன், சடகோபால் பகுதி சபா தலைவர் முத்து ரங்கராஜ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News