உள்ளூர் செய்திகள்

வெள்ளிநீர் வீழ்ச்சி பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆப் சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் குவிந்த வடமாநில புதுமணத்தம்பதிகள்

Published On 2022-12-18 05:54 GMT   |   Update On 2022-12-18 05:54 GMT
  • வடமாநிலங்களில் இருந்து ஏராளமான புதுமணத் தம்பதிகள், காதல் ஜோடிகள் வருவதால் இதனை கப்பிள்ஸ் சீசன் என அழை க்கின்றனர்.
  • கிறிஸ்து மஸ் பண்டிகை கொண்டாட ப்பட உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணி கள் வருகை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏப்ரல், மே மாதம் சீசன் காலமாகும். அப்போது அதிக அளவில் பயணிகள் வருவார்கள். இதே போல் அக்டோபர் மாதத்தில் ஆப் சீசனாகும். அப்போது வடமாநிலங்களில் இருந்து ஏராளமான புதுமணத் தம்பதிகள், காதல் ஜோடிகள் வருவதால் இதனை கப்பிள்ஸ் சீசன் என அழை க்கின்றனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட த்துக்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து பயணிகள் வட்டக்கா னல் பகுதிக்கு வரத் தொட ங்கியுள்ளனர். இவர்களை கவரும் விதமாக ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் குணா குகை, தூண்பாறை, மோயர் பாயிண்ட், பசுமை பள்ள த்தாக்கு கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணி கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

கடந்த 2 நாட்களாக இரவில் கடும் குளிர் நிலவி வந்த போதும் பகலில் வெயில் அடித்து இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. மேலும் மலை கிராமங்களில் உருவாகியுள்ள புதிய அருவிகள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

அடுத்த வாரம் கிறிஸ்து மஸ் பண்டிகை கொண்டாட ப்பட உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணி கள் வருகை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து புதுமணத் தம்பதிகள் மற்றும் இளம் காதல் ஜோடிகள் வருகின்றனர். இதனால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News