உள்ளூர் செய்திகள்

புதிய பூங்காவை ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தபோது எடுத்த படம். அருகில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.

சங்கரன்கோவில் காவேரி நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பூங்கா- ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2023-02-17 14:43 IST   |   Update On 2023-02-17 14:43:00 IST
  • திறப்பு விழாவுக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
  • பூங்காவை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காவேரி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார் சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், முகேஷ் மற்றும் கேபிள் கணேசன், வெங்கடேஷ் வீரமணி, வீரா, ஜிந்தா மைதீன், சம்பத், ஜெயகுமார், பிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News