உள்ளூர் செய்திகள்

சந்தன அபிஷேகத்தில் அருள்பாலித்த மூலை ஆஞ்சநேயர்.

தஞ்சை மேலவீதி மூலை அனுமார் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

Published On 2023-06-17 08:23 GMT   |   Update On 2023-06-17 08:23 GMT
  • மாலை மூலை அனுமாருக்கு தேங்காய்களான சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
  • 1,008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவிலில் பிரதி அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7 மணிக்கு லட்ச ராம நாமம் ஜெபம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் , சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்கு தேங்காய்களான சிறப்பு அலங்காரம் செய்யப்ப டுகிறது. அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியா ளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News