உள்ளூர் செய்திகள்

கிளாங்காடு ஊராட்சியில் பணியாளர்களுக்கு புத்தாடைகள்

Published On 2023-11-10 08:40 GMT   |   Update On 2023-11-10 08:40 GMT
  • கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள கிளாங்காடு ஊராட்சியில் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் இசக்கிமுத்து, வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்,தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளாங்காடு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தீபாவளி பண்டி கைக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News