உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் அரசு பள்ளிக்கு ரூ1.3கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டிடம்

Published On 2023-09-05 10:55 GMT   |   Update On 2023-09-05 10:55 GMT
  • மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குநர் ஷெல்கே திறந்து வைத்தார்.
  • விழாவில் அணுமின் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் தனது சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் 1.3கோடி ரூபாய் செலவில் திருக்கழுக்குன்றம் அடுத்த குண்ணவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடமும் அதற்கு தேவையான நாற்காலிகள், மேஜைகள் வழங்கவும் முடிவு செய்தது. அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குநர் ஷெல்கே திறந்து வைத்தார்.

விழாவில் அணுமின் நிலைய அதிகாரிகள் சுபா மூர்த்தி, வாசுதேவன், ஜெகன், ரவிச்சந்திரன், சின்ன கோவிந்தன், குண்ணவாக்கம் ஊராட்சி தலைவர் நித்தியானந்தம், தலைமை ஆசிரியை தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News