உள்ளூர் செய்திகள்
விருத்தாசலம் நீதிமன்றம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
விருத்தாசலம் நீதிமன்றம் அருகே தூக்கில் பிணமாக வாலிபர் தொங்கினார்.
கடலூர்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த செல்வராஜ்.அவரது மகன் அருள் செல்வன் (வயது20), இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதியன்று வீட்டில் இருந்து காணாமல் போன இவர் விருத்தாசலம் நீதிமன்றம் அருகே உள்ள இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.