உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகேசிகிச்சை பலனின்றி பெண் சாவு

Published On 2022-12-29 14:57 IST   |   Update On 2022-12-29 14:57:00 IST
  • இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.
  • அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அடுத்துள்ள ராமசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி பாரதி (வயது29). இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பதறி போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News