உள்ளூர் செய்திகள்

உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி.

வானூர் அருகே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி உறவினர்கள் சாலை மறியல்

Published On 2022-08-13 08:23 GMT   |   Update On 2022-08-13 08:23 GMT
வானூர் அருகே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தொள்ளமூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பி.இ. முடித்த இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.தற்போது விடுமுறைக்காக ராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தார். அங்கிருந்து மோட்டார் ைசக்கிளில் இன்று காலை புதுவை மாநிலம் புதுக்குப்பம் நோக்கிசென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்தில் இறந்தார்.

தகவல் அறிந்த உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல்அறிந்த வானூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.இன்று நடந்த அரசுநிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு கலெக்டர் ேமாகன் சென்றார். அப்போது மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

Tags:    

Similar News