உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அருகே திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 பேர் கைது
- போலீசார் அதிரடியாக ரோந்து சென்றனர்.
- கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அப்புகுதியில் போலீசார் அதிரடியாக ரோந்து சென்றனர்.
அப்போது அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகன் என்பவரது மகன் புருசோத்தமன்(வயது 26), சக்கரவர்த்தி(25) ஆகிய இருவரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 46 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.