உள்ளூர் செய்திகள்

பேரிகை அருகே தண்ணீர் தொட்டியில் குடிபோதையில் விழுந்தவர் பலி

Published On 2022-09-14 15:31 IST   |   Update On 2022-09-14 15:31:00 IST
  • தண்ணீர் அதிக அளவு உள்ள இந்த தொட்டியில் மாதேஷ் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
  • மாடு, ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பேரிகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மாலுர் பகுதியை அடுத்த பண்டப்பள்ளியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 30).இவருக்கு திருமணமாகி பரிமளா என்ற மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.

சம்பவத்தன்று மாதேஷ் வேலை தேடி பேரிகைக்கு வந்துள்ளார்.

மதியம் அதிக அளவு மது அருந்தி விட்டு பேரிகை சாலையில் அண்ணா நகர் அருகே உள்ள சுடுகாட்டில் இருந்துள்ளார். இங்கு மாடு, ஆடுகள், மக்கள் கை கால் கழுவி செல்ல தண்ணீர் தொட்டி உள்ளது.

தண்ணீர் அதிக அளவு உள்ள இந்த தொட்டியில் மாதேஷ் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

மாடு, ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பேரிகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் இறந்து கிடந்த மாதேஷ் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News