உள்ளூர் செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே ஜவ்வாதுமலையிருந்து கள்ள சாராயம் கடத்தி வந்தவர் கைது

Published On 2022-09-19 14:40 IST   |   Update On 2022-09-19 14:40:00 IST
  • கள்ள சாராயத்தை வாங்கி வந்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • லாரி டயரின் டியூபில் சாராயத்தை கடத்தி விற்பனைக்கு கொண்டு வந்தபோது அவரை வளைத்து பிடித்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகேயுள்ள நெல்லிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 29).

இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிருந்து கள்ள சாராயத்தை வாங்கி வந்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பரசுராமன் லாரி டயரின் டியூபில் சாராயத்தை கடத்தி விற்பனைக்கு கொண்டு வந்தபோது அவரை வளைத்து பிடித்தனர்.

அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பரசுராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News