உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ஊராங்காணி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ஊராங்காணி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகே தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன்(வயது23) என்பவர் சாராயம் விற்றார். உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.