உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே நாய் குரைத்ததால் கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு

Published On 2022-09-05 12:07 IST   |   Update On 2022-09-05 12:07:00 IST
  • சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்.
  • வெண்ணி லாவை ஆபாச வார்த்தை களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி வெண்ணிலா (வயது 30). இவரது வளர்ப்பு நாய் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மனைவி ராணி என்பவரை பார்த்து குரைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் நாய் மீது கல்லை வீசியபோது அது இரும்பு கதவின் மீது பட்டதாக தெரி கிறது. இதை வெண்ணிலா தட்டிக் கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராணி அங்கிருந்த பூச்செடிகளை சேதப்படுத்தி, வெண்ணி லாவை ஆபாச வார்த்தை களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் ராணி மீது சங்கரா புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News