உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், ரவியை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் கீழ்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (20) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.