உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த கோவிலை படத்தில் காணலாம்.

மத்தூர் அருகேசின்னமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2023-02-07 15:25 IST   |   Update On 2023-02-07 15:25:00 IST
  • பூட்டை உடைத்து 130 பட்டு புடவைகள், 3 பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளி ஆகியவை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றனர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த ேகாவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோட்டூர் பகுதியில் சின்னமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து 130 பட்டு புடவைகள், 3 பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளி ஆகியவை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றனர்.

இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த ேகாவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News