உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே கவுண்டனூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம்
- கால்நடைகளுக்கு மலடு நீக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் பகுதியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு மலடு நீக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு கிருஷ்ணகிரி கோட்ட உதவி இயக்குநர் அருள்ராஜ் தலைமையில் பெரம கவுண்டனூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் தமிழ் இன்பன் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சையான குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் சினை தரிசிக்காத கால்நடைகளுக்கு உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை இம்முகாமில் அளிக்கப்பட்டது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.