உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-10-28 15:00 IST   |   Update On 2022-10-28 15:00:00 IST
  • விக்னேஷ் பள்ளி மாணவியை திருமணம் செய்தது தெரியவந்தது.
  • விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 23). இவர் காரிமங்கலத்தில் பானி பூரி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே பழக்க வழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 8-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருவரையும் போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் விக்னேஷ் பள்ளி மாணவியை திருமணம் செய்தது தெரியவந்தது.

இதை அடுத்து பாலக்கோடு மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த தாக விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News