உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கபட்ட போது எடுத்த படம்.

ஓசூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-09-08 09:49 GMT   |   Update On 2022-09-08 09:49 GMT
  • ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
  • முன்னதாக பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.

ஓசூர்,

ஓசூர் அருகே ஜுஜுவாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி விழாவில் பேசினார்கள். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.

மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் அசோகா, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் துணைத்தலைவர் ஆனந்த ரெட்டி, பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், மற்றும் ஆசிரிய, ஆசிரியையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News