உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ரூ.6.76 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

Published On 2022-09-25 15:13 IST   |   Update On 2022-09-25 15:13:00 IST
  • வாகன சோதனையில் வேன் ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
  • அந்த வேனில் ரூ.6.76 லட்சம் போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி,செப்.25-

ஓசூர் சிப்காட் போலீசார் பேகைப்பள்ளி ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் நடத்திய வாகன சோதனையில் வேன் ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அந்த வேனில் ரூ.6.76 லட்சம் போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேனில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மஹேந்திரசிங் (வயது 35), பட்டேல்சிங் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News