உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர் மீது புகார்
- பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
- முரளி என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ஓசூர் டவுன் போலீசில் அஞ்சப்பா புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள தேர்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஞ்சப்பா. இவரது மகள் நிவேதா (வயது 22).
நேற்று சர்ச்சுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற நிவேதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் நிவேதாவை பேரிகை பகுதியை சேர்ந்த முரளி என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ஓசூர் டவுன் போலீசில் அஞ்சப்பா புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிவேதாவையும், அவரை கடத்தியதாக கூறப்படும் முரளியையும் தேடி வருகின்றனர்.