உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே லாரி மோதி 5 வயது குழந்தை சாவு

Published On 2022-07-05 13:44 IST   |   Update On 2022-07-05 13:44:00 IST
  • மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
  • சிகிச்சை பலனின்றி குழந்தை உமைரா உயிரிழந்த பரிதாபம்.

கிருஷ்ணகிரி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமது. இவர் தற்போது ஓசூரில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

முஸ்தாக் அஹமது தனது 5 வயது குழந்தை உமைராவுடன் மோட்டார் சைக்கிளில் ஓசூர் ரிங் ரோடு பகுதியில் சென்றுள்ளார். அப்போது பின்னல் வந்த லாரி ஒன்று அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தந்தை, மகள் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு ஒசூர் அரசு மருத்துவனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உமைரா உயிரிழந்தது. முஸ்தாக் அஹமது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவரதுமனைவி நிஷா(29) தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News