உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் மாயம்

Published On 2022-09-13 15:25 IST   |   Update On 2022-09-13 15:25:00 IST
  • இவர் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
  • கடந்த மாதம் 13-ந்தேதி அன்று தான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே சென்ற ரவி அதன்பிறகு திரும்பவில்லை.

கிருஷ்ணகிரி,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை ரவி (வயது 26). இவர் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த மாதம் 13-ந்தேதி அன்று தான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே சென்ற ரவி அதன்பிறகு திரும்பவில்லை.

இது பற்றி தகவல் அறிந்த ரவியின் தந்தை ராஜேந்திரன் தந்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து மாயமான ரவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News