உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-11-07 15:36 IST   |   Update On 2022-11-07 15:36:00 IST
  • நேற்று மீண்டும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் வீட்டில் தகராறு நடந்தது.
  • மனமுடைந்து காணப்பட்ட கணபதி வீட்டின் அருகில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி,

தருமபுரி அடுத்த பெரியகுரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது48). மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் வீட்டில் தகராறு நடந்தது.

இதில் மனமுடைந்து காணப்பட்ட கணபதி வீட்டின் அருகில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News