உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகேஇரு தரப்பு மோதலில் 26 பேர் மீது வழக்கு

Published On 2023-04-20 07:34 GMT   |   Update On 2023-04-20 07:34 GMT

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமம், கிழக்கு மேடு புது மாரியம்மன் கோவில் தெரு பகுதியைசேர்ந்த ஆணைகவுண்டர் (74). இவருக்கும், அதே பகுதியைசேர்ந்த பிரியா (25) என்பவரின் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆணைகவுண்டர், பிரவின் குமார், மகேந்திரன், பிரியா ஆகிய 4 பேர் காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 26 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News