உள்ளூர் செய்திகள்

சாமல்பட்டி அருகே எலி பேஸ்ட் தின்ற கல்லூரி மாணவி சாவு

Published On 2022-10-07 09:23 GMT   |   Update On 2022-10-07 09:23 GMT
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
  • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள அத்திவீரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகள் சுவேதா. இவர் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அன்று வீட்டில் சுவேதா எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News