உள்ளூர் செய்திகள்

சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் சிக்கினர்

Published On 2022-09-25 15:29 IST   |   Update On 2022-09-25 15:29:00 IST
  • வெள்ளியம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • அவர்களை கைது செய்த போலீசார் ரூ.400 பணம், 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகேயுள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது முரளி(வயது 45), சேட்டு(46), மாதேஷ் (48), பிரபாகரன்(30 ), கோவிந்தன் (60), சுப்பிரமணியன் (60), சக்திவேல் (35) ஆகிய 8 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தபோது சிக்கினர்.

அவர்களை கைது செய்த போலீசார் ரூ.400 பணம், 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Similar News