உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டுரோடு அருகே சாராயம் விற்ற பெண் கைது

Published On 2022-08-15 08:32 GMT   |   Update On 2022-08-15 08:32 GMT
  • பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் தொண்டநந்தல் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
  • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டு தெருவை சேர்ந்த கோலஸ் மனைவி ரீத்தாமேரி(38) என்பவரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் தொண்டநந்தல் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டு தெருவை சேர்ந்த கோலஸ் மனைவி ரீத்தாமேரி(38) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News