உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஆண்டிபட்டி அருகே அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் திடீர் சாவு

Published On 2023-10-22 12:05 IST   |   Update On 2023-10-22 12:05:00 IST
  • வீட்டு விஷேசத்தில் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்.
  • சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன ்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன் (வயது49). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தேனி கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

மது பழக்கம் இருந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டு விஷேசத்தில் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி செய்த பின்னர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News