உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் வட்டார கல்வி அலுவலர் நியமன தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 10-ந்தேதி வட்டார கல்வி அலுவலர் தேர்வு

Published On 2023-08-29 15:24 IST   |   Update On 2023-08-29 15:24:00 IST
  • வட்டார கல்வி அலுவலர் தேர்வுக் கான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
  • நாமக்கல் வடக்கு ஆகிய 4 மையங்களில் மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக் கான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்க ளுக்கான பணிகளை சரி யான முறையில் மேற்கொள்ளுமாறு தெரி விக்கப்பட்டது. தேர்வு மையங்களில் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகை களில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் கலெக்டர் உமா தெரிவித்ததாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வு நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி, காவேரிப் பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி நாமக்கல் வடக்கு ஆகிய 4 மையங்களில் மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

தேர்வர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையத் திற்கு காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே அனு மதிக்கப்படுவர். தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்தில் அனு மதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வர்கள் தங்க ளுக்கான தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வர்க ளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ள வழிகாட்டு நெறி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார் கள். மேற்கண்ட தேர்வு மையங்க ளுக்கு செல்ல அரசு போக்கு வரத்துக்கழக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவ லர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழகம், தீயணைப்புத்துறை, அஞ்சல் துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தேர்வு மையப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News