கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி முனியப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
திருப்பதி முனியப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்
- கும்பாபிஷேக விழா கடந்த 26-ந் தேதி இரவு கிராம சாந்தி வழிபாட்டுடன் தொடங்கியது
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் வழிபாடு, 4-ம் கால யாக பூஜை, யாத்ரா தானம் மற்றும் கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார் பாளையத்தில் திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி, கையில் ஏந்தி நிற்கும் ஒரு டன் எடையும், 30 அடி நீள மும் உள்ள வாள் மற்றும் சுமார் 10 அடிநீளமுள்ள மீசை ஆகியவற்றிக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 26-ந் தேதி இரவு கிராம சாந்தி வழிபாட்டுடன் தொடங்கியது. 27-ந் தேதி அதிகாலை 5.30 மணி அள வில் விநா யகர் வழிபாடு, புண்யாகம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோ மம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அன்று மதியம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. 28-ந் தேதி காலை திருப்பதி முனியப்ப சாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், 2-ம் கால யாக பூஜை, மருந்து சாற்றுதலும், மூல மந்திர காயத்ரி மந்திர ஹோமமும் நடைபெற்றது. மாலை அஷ்டலட்சுமி பூஜை, 3-ம் கால பூஜையும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் வழிபாடு, 4-ம் கால யாக பூஜை, யாத்ரா தானம் மற்றும் கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் திருப்பதி முனியப்ப சாமிக்கு மகா கும்பாபிஷேகமும், மறு அபிஷேகமும், மகா தீபாரா தனையும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது.
விழாவில் பிலிக்கல் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக் தர்கள மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.
விழா விற்கான ஏற்பாடு களை சேளூர் சாணார்பா ளையம் திருப்பதி முனி யப்ப சாமி கோவில் மகா கும்பா பிஷேக விழா குழுவி னர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்தி ருந்தனர்.