ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
- ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின் வினியோகம் இருக்காது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பாளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சிறுநல்லி கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.