உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

Published On 2023-09-27 15:30 IST   |   Update On 2023-09-27 15:30:00 IST
  • பனிமலர் (56). இவர் கடந்த 23-ந் தேதி வசந்தபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு உறவினர் வசந்த் என்பவரது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
  • பனிமலருக்கு தலை சுற்றுவது போன்று இருந்ததால் மோட்டார்சைக்கிளை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (65). இவரது மனைவி பனிமலர் (56). இவர் கடந்த 23-ந் தேதி வசந்தபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு உறவினர் வசந்த் என்பவரது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் இரும்புபாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மதுரைவீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பனிமலருக்கு தலை சுற்றுவது போன்று இருந்ததால் மோட்டார்சைக்கிளை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து வசந்த் திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி பனிமலர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பனிமலர் நேற்று இறந்தார். இது குறித்து பனிமலரின் மகன் நிஷாந்த் (29) அளித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News