உள்ளூர் செய்திகள்

குடும்ப பிரச்சினை பெட்ரோல் நிலைய ஊழியர்தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-11-26 08:37 GMT   |   Update On 2023-11-26 08:37 GMT

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் சோழிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் -மனைவியிடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் தனியாக வீட்டில் இருந்த போது மனைவியின் துப்பட்டாவை எடுத்து விட்டத்தில் மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அவரது உறவினர்கள் பார்த்த போது கோவிந்தராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Tags:    

    Similar News