உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

Published On 2023-06-29 08:51 GMT   |   Update On 2023-06-29 08:51 GMT
  • தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலகம் முழுவதும் கொரோனா பேரழிவு உள்ளிட்ட பெரும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.
  • இதில் மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தூத்துக்குடி:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

மாநகரில் சிதம்பரநகர் வி.வி.டி. சிக்னல் அருகே ஈத்கா தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழு கையில் ஈடுபட்டனர். தூத்து க்குடி ஜாமியா பள்ளிவாசலில் இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலகம் முழுவதும் கொரோனா பேரழிவு உள்ளிட்ட பெரும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். போர் உள்ளிட்டவை நீங்கி மனிதநேயம் உலகம் முழு வதும் தழைக்க வேண்டும். மேலும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Tags:    

Similar News