உள்ளூர் செய்திகள்

முனியப்பன் கோவில், முத்து மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

முனியப்பன், முத்துமாரியம்மன் கோவிலில் 3 உண்டியலை உடைத்து கொள்ளை மர்ம நபர்கள் அட்டகாசம்

Published On 2022-07-05 09:21 GMT   |   Update On 2022-07-05 09:21 GMT
  • காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் 3 உண்டியல்கள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை‌ கோம்பை அடிவாரத்தில் முத்து மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில் ஆகிய 2 கோவில்கள் உள்ளன. சித்திரை மாதத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றி கிடாவெட்டி வழிபடுவது வழக்கம். இதேபோல் ஆடி 18 அன்று முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி வழிபட்டு வருகின்றனர்.

முத்து மாரியம்மன் கோவிலில் 1 உண்டியல் மற்றும் முனியப்பன் கோவிலில் 2 உண்டியல்கள் உள்ளன. நேற்று இங்கு பூஜை முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் 3 உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

3 உண்டியல்களிலும் ரூ 20 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்திருக்கும் என தெரிகிறது. காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் 3 உண்டியல்கள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News