உள்ளூர் செய்திகள்
பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம்
- பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
- அடிப்படை வசதிகள், வளர்ச்சிபணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூ ராட்சி மன்ற கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
இதில் செயல்அலுவலர் மனோகரன், துணை தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், கிருஷ்ணன், ஸ்ரீதர், மணி வண்ணன், லிங்கோஜிராவ், ஜெயந்த், உட்பட 18-வார்டுகவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 18-வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வளர்ச்சிபணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.