உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

124 அடியை எட்டிய முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2023-10-27 05:12 GMT   |   Update On 2023-10-27 05:12 GMT
  • முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கூடலூர்:

முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 124.25 அடியாக உள்ளது. வரத்து 1129 கனஅடி, திறப்பு 1333 கனஅடி. இருப்பு 3450 மி.கனஅடி.

பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்றுகாலை நிலவரப்படி 62.37 அடியாக உள்ளது. வரத்து 1508 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 4071 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. வரத்து 54 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 401.28 மி.கனஅடி.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடி, வரத்து 11 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.

Tags:    

Similar News