உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

தொடர் மழையால் 130 அடியை எட்டும் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2023-11-11 04:42 GMT   |   Update On 2023-11-11 04:42 GMT
  • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
  • விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு நீர்வரத்து 1598 கனஅடியாக இருந்தது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடிநீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. 1309 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. 214 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 239.38 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பெரியாறு 19, தேக்கடி 8.4, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 7.3, போடி 2.4, வைகை அணை 5, மஞ்சளாறு 3.4, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1, வீரபாண்டி 2.6, அரண்மனைப்புதூர் 2.2, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News