- சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
- கைது செய்து அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக நகர காவல் துறையினருக்கு புகார்கள் வந்தது. அதனையடுத்து காவல்துறையினரும் புகாரின் பெயரில் குற்றவாளிகளை பிடித்து அவர்களிடம் வாகனங்களையும் மீட்டு வந்தனர். மேலும் பலரின் புகார்களுக்கு சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்ட காரிமங்கலம் அருகே கன்னிப்பட்டி பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருட்டில் ஈடுபட்ட வேலுமணியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஏற்கனவே 2021-ல் இருசக்கர வாகனம் திருடிய 6 வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.