உள்ளூர் செய்திகள்

தென்காசியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2022-11-17 14:20 IST   |   Update On 2022-11-17 14:20:00 IST
  • தென்காசி அருகே உள்ள அய்யாபுரத்தை சேர்ந்த சக்திமாரி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
  • தலையில் பலத்த காயமடைந்த சக்திமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமாரி. இவரது மகன் சக்திமாரி (வயது 20).

இவர் நேற்று இரவு தனது நண்பர் சுரேஷ் என்பருடன் சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் குத்துக்கல்வலசை சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அய்யாபுரம் விளக்கு அருகே சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த மீனாட்சி சுந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும் தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News