உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை

Published On 2022-09-08 09:07 GMT   |   Update On 2022-09-08 09:07 GMT
  • கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
  • கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி காந்திமதி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர். கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் அவர் இருந்தார். நேற்று இரவு வீட்டில் குழந்ைதகள் கண்அயர்ந்து தூங்கினர். அப்போது காந்திமதி திடீர் வீட்டினை உள்புறமாக பூட்டினார். பின்னர் கயிறால் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

காலையில் எழுந்து பார்த்த குழந்தைகள் காந்திமதி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து காந்திமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News