உள்ளூர் செய்திகள்

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தாய், குழந்தை பலி

Published On 2023-11-27 15:40 IST   |   Update On 2023-11-27 15:40:00 IST
  • கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தாய், குழந்தை உயிரிழந்தனர்.
  • குழாயில் தண்ணீர் திறந்து விட்டபோது சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் முனி யாண்டி இவரது மனைவி மீனா(26) இவர்க ளுக்கு இரண்டரை ஆண்டுக ளுக்கு முன்பு திருமணம் நடை பெற்று ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நேற்று, வீட்டில் மீனா தனது குழந்தையை இடுப் பில் வைத்து கொண்டு பெரிய தண்ணீர் தொட்டி யில் ஏறி குழாயை திறந்து தண்ணீர் விட்டுள்ளார்.

அப்போது இதில் தாயும், குழந்தையும் நிலை தடுமாறி தவறி தண்ணீர் தொட் டிக்குள் விழுந்து உயிரிழந்த னர். இது குறித்து முனி யாண்டி அளித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீ சார் விரைந்து சென்று உடல்களை கைபற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News