கொடைக்கானலில் இதமான சாரலுடன் குளுகுளு சீசன் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தற்போது சீசன் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ெதாடங்கியதால் சாரல்மழை பெய்து இதமான தட்பவெப்பம் நிலவி வருகிறது.
இந்த சீதோஷ்ணத்தை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, கோக்கர்ஸ்வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ேராஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். தொடர் மழையால் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஓட்டல் உரிமையாளர்கள், சிறுவியாபாரிகள் தற்போது தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.