உள்ளூர் செய்திகள்

கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்.

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

Published On 2022-11-03 10:18 GMT   |   Update On 2022-11-03 10:18 GMT
  • வடகிழக்கு பருவமழையின் போது மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
  • மழைக்காலங்களில் கருவாடு காய வைப்பதற்கு தனி இடம் அமைத்து தரவேண்டும்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரரா ஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் துறைமுக மீன்வளத்துறை வளாகத்தில் மீன்பிடி படகுகளுக்கு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை (வளர்ச்சி) கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.

வடகிழக்கு பருவமழையின் போது மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பான முறையில் படகுகளை நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.முன்னதாக புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் வடிகால் வசதி, மழைக்காலங்களில் கருவாடு காய வைப்பதற்கு தனி இடம் அமைத்து தரவேண்டும், மல்லிப்பட்டினம் பகுதிகளில் சாலைகள் சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஹபீப் முகமது வைத்தார்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News