உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த கோவிலில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தேவதானப்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

Published On 2022-08-24 05:46 GMT   |   Update On 2022-08-24 05:46 GMT
  • காலை கோவிலுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. மேலும் கோவில் உண்டியல் மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோயி ருந்தது.
  • கண்காணிப்பு காமிராக்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள சில்வார்பட்டியில் நெல்லையப்பர், காந்திமதியம்மன், சாஸ்தா பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் திருவிழா நடந்து முடிந்தது.

கோவில் பூசாரியாக பிச்சைமணி என்பவர் இருந்து வருகிறார். நேற்று இரவு வழக்கமான பூஜை களை முடித்து விட்டு கோவிலை அடைத்து சென்று விட்டார். இன்று காலை கோவிலுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. மேலும் கோவில் உண்டியல் மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோயி ருந்தது.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

கோவிலில் உண்டியல் மற்றும் பூஜைப்பொருட்கள் திருடுபோன சம்பவம் தெரிந்ததும் அப்பகுதி மக்கள் கோவிலுக்குள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Tags:    

Similar News