உள்ளூர் செய்திகள்

புதிய கட்டிடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ ஆய்வு

Published On 2023-07-06 14:13 IST   |   Update On 2023-07-06 14:13:00 IST
  • கடத்தூர் கிளை நூலகத்திற்கு இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டிடம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
  • கட்டடத்தை தரமாக விரைவாக கட்டி முடிக்க ஒப்பந்ததாரை அறிவுறுத்தினார்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்திற்கு இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டிடம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கட்டிடம் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ திடீர் ஆய்வு செய்தார். கட்டடத்தை தரமாக விரைவாக கட்டி முடிக்க ஒப்பந்ததாரை அறிவுறுத்தினார்.

அப்போது நூலகர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத், அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி கான்சிலர் சஃபியுல்லா, ஒன்றிய துணை செயலாளர் ரவிந்திரன், சென்னகிருஷ்ணன், முருகன், ஆதிமூலம், செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News