உள்ளூர் செய்திகள்

கிணற்றில் பிணமாக கிடந்த பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புக்குழுவினர். 

சங்ககிரி அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

Published On 2023-10-06 13:15 IST   |   Update On 2023-10-06 13:19:00 IST
  • கணவர் பிரகாஷ், அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
  • தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லதா உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சங்ககிரி:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சின்னபள்ளத்து சந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கேபிள் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி லதா (வயது 41). இவர் கடந்த 4-ந் தேதி மாயமானார்.

இதுகுறித்து கணவர் பிரகாஷ், அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சங்ககிரி புதிய எடப்பாடி ரோட்டில் உள்ள சந்தைப்பேட்டை செல்லியாண்டி அம்மன் கோவில் கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் தெரிந்து அங்கு சென்று பார்த்த பிரகாஷ், கிணற்றில் கிடப்பது தனது மனைவி தான் என உறுதி செய்தார்.

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லதா உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News