உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் பேரூராட்சி சிறப்பு கூட்டம்

Published On 2023-04-12 17:04 IST   |   Update On 2023-04-12 17:04:00 IST
  • பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
  • பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பொன்னேரி:

நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. செயல் அலுவலர் வெற்றி அரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Similar News